Saturday, December 18, 2010

இலவசத் திட்டங்களுக்கு சாட்டையடி கொடு

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக் கொடுத்து இலவசத் திட்டங்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார்.


கடந்த 23-ம் தேதி கொத்தமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. செயலாளர் பெரியண்ண அரசு தலைமையில் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் விழா நடந்து கொண்டிருந்தது.அப்போது பயனாளிகள் பட்டியலில் இருந்து விஜயகுமார் என்ற பெயர்
வாசிக்கப்பட்டதும்,கொத்தமங்கலம் மணவாளன் தெருவைச் சேர்ந்த விஜயகுமார் என்ற விவசாயி மேடையேறினார்.

அவருக்கு வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கிக் கொண்டார்.ஒரு விநாடி அங்கே நின்றவர்,டி.வி.யை பெரியண்ண
அரசுவிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு,கூடவே ஒரு மனுவையும் கொடுத்தார்.ஏதோ கோரிக்கை மனு கொடுக்கிறார் என்று அரசுவும் சாதாரணமாக வாங்கிப் படித்தார்.


அதில்

‘மனிதனுக்கு டி.வி. என்பது பொழுதுபோக்கு சாதனம்தான். ஆனால் அதைவிட முக்கியமானது உணவு, உடை, உறைவிடம். தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள் இருக்கின்றன. இவை தன்னிறைவு அடைந்து விட்டனவா? குறிப்பாக, விவசாயிகளைப் பாதிக்கும் மின்சாரத்துறை தன்னிறைவு அடைந்து விட்டதா?

துறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகு மிதமிஞ்சிய பணத்தில் இந்த டி.வி.யை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இதற்கு மட்டும் எங்கிருந்து நிதி வந்தது?இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள் தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள். டி.வி. வழங்கும் பணத்தை வைத்து விவசாயிகளுக்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம்.


தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து போதுமான மின்சாரத்தை தடையின்றிக் கொடுத்து அந்த ஒரு மாவட்டத்தையாவது தன்னிறைவு அடையச் செய்திருக்கலாம்.

இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம். தரமான மருத்துவம், கல்வி, மும்முனை மின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கினாலே போதும். அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி.வி.முதல் கார் வரை அனைத்தையும் வாங்கிக் கொள்வோம்.

எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்களே பூர்த்தி செய்து தன்னிறைவு அடைந்து விடுவோம்.

விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர் பற்றாக்குறை, லஞ்சம், ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு
நடமாடும் பிணமாக நான் எப்படி டி.வி. பார்க்க முடியும்? எனவே எனக்கு இந்த டி.வி. வேண்டாம். முதல்வர் கருணாநிதி மீது எனக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும், அன்பும் உள்ளது.

எனவே,இந்த டி.வி.யை அவருக்கே அன்பளிப்பாகக் கொடுக்க இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.அவர் இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என் மனம் மேலும் வேதனைப்படும். அரசு மற்றும்
அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாகச் செய்தாலே போதும். இந்தியா
வல்லரசாகிவிடும்’ என்று நீண்டது அந்த மனு.

இதைப் படித்த பெரியண்ண அரசு முகத்தில் ஈயாடவில்லை.அருகில் இருந்த அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள்.என்றாலும் அந்த மனுவையும் டி.வி.யையும் வாங்கி வைத்துக் கொண்டு மேலும் பரபரப்பை உண்டாக்காமல் விஜயகுமாரை அனுப்பி வைத்தார் அரசு.


இதன் பின்னர் விஜயகுமாரிடம் பேசினோம். “நான் ஒரு சாதாரண விவசாயி. விவசாயிகள் எல்லாம் மின்வெட்டால் பாதிக்கப்பட்டு
விளைநிலத்தை ரியல் எஸ்டேட்காரன்கிட்ட வித்துட்டு நகரத்துல போய் கூலி வேலைக்கும்,ஹோட்டல் வேலைக்கும் அல்லாடிக்கிட்டிருக்கான்.

இந்த நிலை, நாளைக்கு எனக்கும் என் பிள்ளைகளுக்கும் வரப் போகிறது. எதிர்காலத்தை நினைத்து மனம் கலங்கிப் போய் இருக்கிறது. ராத்திரியில படுத்தால் தூக்கம் வர மாட்டேங்குது.

சாராயத்தை குடிச்சுட்டு, ஒரு ரூபாய் அரிசியை தின்னுட்டு உழைக்கும் வர்க்கம் சோம்பேறியாகிக்கிட்டிருக்கு.ரொம்ப சீப்பா கணக்குப் போட்டாலும் ஒரு டி.வி. ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க.

தமிழ்நாட்டில் ரெண்டு கோடி குடும்ப அட்டைகள் இருக்கு.2கோடி குடும்ப
அட்டைக்கும் டி.வி. கொடுத்தால் இருபது லட்சம் கோடி செலவாகும்.இதை வைத்து 88 துறைகளையும் தன்னிறைவு அடையச் செய்தாலே போதுமே.

கனத்த இதயத்தோடும், வாடிய வயிறோடும் இருக்குறவனுக்கு எதுக்கு டி.வி.? அவன் பொழப்பே சிரிப்பா சிரிக்கும்போது அவன் டி.வி. பாத்து வேற சிரிக்கணுமாக்கும்.அதுனாலதான் நான் டி.வி.யை திருப்பிக் கொடுத்தேன்’’ என்றார்.

டி.வி.யை திருப்பிக் கொடுத்த கையோடு முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறார் விஜயகுமார்.

அந்தக் கடிதத்தில் ‘கொத்தமங்கலத்துக்கு வந்த டி.வி.க்கள் 2519. அதில் 2518
மட்டும்தான் வழங்கப்பட வேண்டும். எனக்கான ஒரு டி.வி.யை எனது அன்புப் பரிசாக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்’என்று குறிப்பிட்டு அதை ஃபேக்ஸ் செய்துள்ளார்.

மக்களிடம் இருந்து சுரண்டப்படும் பணத்தில் மக்களுக்கே கொடுக்கப்படும் லஞ்சம் தான் இலவசங்கள் என்பதை விவசாயி விஜயகுமார் பொட்டில் அடித்தாற்போல் தெளிவுபடுத்தியுள்ளார். மக்களை சோம்பேறிகளாக்கும் இலவசத்துக்கு எதிராக போர் தொடுத்திருக்கும் அவரை பாராட்டத்தான் வார்த்தைகளே கிடைக்கவில்லை...!

Sunday, November 28, 2010

தொலைத் தொடர்பு அமைச்சர் ராஜாவின் செயலால் நாட்டுக்கு ரூ.1.7 லட்சம் கோடி இழப்பு-சிஏஜி அறிக்கை

மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சகத்தின் 2ஜி ஏலத்தால் நாட்டுக்கு ரூ. 1.70 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அமைச்சர் ராஜாவின் அணுகுமுறையே இதற்கு முழுக் காரணம் என்றும் மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.




2008ல் நடந்த 2ஜி ஏலம் மிக மிக மட்டமான விலைக்கு விடப்பட்டது. ஆனால் அதை ஏலம் எடுத்த நிறுவனங்கள் மற்றவர்களுக்கு பல மடங்கு விலை வைத்து விற்று விட்டனர். இந்த வகையில் நாட்டுக்கு ரூ. 1.70 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளாக கணக்கு தணிக்கை அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்த பெரும் தேசிய நஷ்டத்துக்கு அமைச்சர் ராஜாதான் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதால் ராஜாவின் நிலை மேலும் சிக்கலாகியுள்ளது.



2ஜி ஏலம் தொடர்பாக, மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி தனது இறுதி அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளார். அதில் உள்ள அனைத்துமே ராஜாவுக்கு எதிரானதாக உள்ளது.



அறிக்கையின் சில முக்கியப் பகுதிகள்...



2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் தொடர்பாக பிரதமர், சட்ட அமைச்சர், நிதியமைச்சர், தொலைத் தொடர்பு ஆணையத்தின் பரிந்துரை என எதையுமே காதில் போட்டுக் கொள்ளாமல் அனைத்தையும் நிராகரித்து விட்டார் அமைச்சர் ராஜா.



மிக மிகக் குறைந்த விலைக்கு ஏலம் கேட்ட சில குறிப்பிட்ட நிறுவனங்களை மட்டும் அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.



முழுக்க முழுக்க தன்னிச்சையாக இதை அவர் செய்துள்ளதால் இந்த பெரும் தேசிய நஷ்டத்திற்கு ராஜாவே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.



அதேபோல தனது பரிந்துரைகளை தொலைத் தொடர்பு அமைச்சகம் அப்பட்டமாக மீறி செயல்பட்டுக் கொண்டிருந்ததைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது டிராய் அமைப்பு. தொலைத் தொடர்பு அமைச்சகத்தின் செயலை அது தடுத்து நிறுத்த முயன்றிருக்க வேண்டும்.



2008ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த 2ஜி ஏலத்தின்போது மொத்தம் 122 புதிய உரிமங்கள் வழங்கப்பட்டன. அதில் 12 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 85 உரிமங்கள் தொலைத் தொடர்புத்துறை நிர்ணயித்திருந்த தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்யாதவையாகும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.



நஷ்டத்தை கணக்கிட்டது எப்படி



மொத்தம் 3 வழிகளில் 2ஜி ஏலத்தால் நாட்டுக்கு ஏற்பட்டநஷ்டத்தைக் கணக்கிட்டுள்ளது கணக்கு தணிக்கை அலுவலகம்.



முதல் வழி - 2ஜி ஏலத்தில் பங்கேற்ற எஸ் டெல் நிறுவனம் 2007ம் ஆண்டு பிரதமருக்கும், பின்னர் தொலைத் தொடர்புத் துறை அமைச்சருக்கும் அனுப்பிய ஆஃபர் கடிதத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது.



அந்தக் கடிதத்தின்படி பார்த்தால், 122 புதிய உரிமங்களின் மதிப்பு ரூ. 65,725 கோடியாக வருகிறது. ஆனால், மத்திய தொலைத் தொடர்புத் துறை வெறும் ரூ. 9013 கோடியை மட்டுமே இந்த உரிமங்களுக்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து வசூலித்துள்ளது.



அதேபோல எஸ்.டெல் நிறுவனம் டூயல் டெக்னாலஜிக்கான கட்டணமாக ரூ. 24,591 கோடி தர முன்வந்துள்ளது. இதையும் சேர்த்து கணக்கிட்டால் ரூ. 90,316 கோடியாக வருகிறது.



2வது வழி - 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் கிடைத்த தொகையை ஒப்பிட்டுப் பார்த்தபோது, 2ஜி ஏலத்தால் ஏற்பட்ட நஷ்டமாக ரூ. 1 லட்சத்து 11 ஆயிரத்து 511 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது.



டூயல் தொழில்நுட்ப கட்டணம் மட்டும் ரூ. 40,526 கோடி கிடைத்திருக்க வேண்டும். ஆனால் இதில் கிடைத்ததுவெறும் ரூ. 3372 கோடி மட்டுமே. எனவே மொத்த நஷ்டத்தின் அளவு ரூ. 1 லட்சத்து 39 ஆயிரத்து 652 கோடியாகும்.



6.2 மெகாஹெர்ட்ஸுக்கும் மேற்பட்ட அலைக்கற்றை ஒதுக்கப்பட்டிருப்பதை வைத்து கூட்டிப் பார்க்கும்போது கிட்டத்தட்ட ரூ. 1 லட்சத்து 76 ஆயிரத்து 379 கோடி அளவுக்கு நஷ்டத் தொகை வந்து நிற்கிறது.



இதன் மூலம் முன்பு கணித்ததை விட பல ஆயிரம் கூடி கூடுதல் நஷ்டக் கணக்கு வருகிறது.



உரிமங்களைப் பெற்ற நிறுவனங்கள், பெற்ற வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கணக்கிட்டுப் பார்த்தால், இந்தியா முழுமைக்குமான உரிமக் கட்டணம் ரூ. 7442 கோடி முதல் ரூ. 47,918 கோடியாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இதை வெறும் ரூ. 1658 கோடிக்கு மட்டுமே கொடுத்துள்ளார் ராஜா.



கணக்கு தணிக்கை அதிகாரியின் இந்த இறுதி அறிக்கை பெரும் புயலைக் கிளப்பும் எனத் தெரிகிறது. சமீபத்தில்தான் இந்த ஊழல் தொடர்பான வழக்கின் விசாரணையின்போது மத்தியஅரசை கடுமையாக சாடியிருந்தது சுப்ரீம் கோர்ட்.



ஆதர்ஷ்வீட்டு வசதிக் கழக ஊழலில் சிக்கிய மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவானையும், காமன்வெல்த் ஊழலில் சிக்கிய கல்மாடியையும் காங்கிரஸ் கட்சி உடனடியாக பதவி நீக்கம் செய்துள்ளது. ஆனால் கூட்டணிக் கட்சியான திமுகவைச் சேர்ந்த ராஜா மீது கை வைக்க முடியாமல் கடுமையாக திணறி வருகிறது மத்திய அரசு. ஆனால் கணக்கு தணிக்கை அதிகாரியின் இறுதி அறிக்கையில் நஷ்டக் கணக்கு 1 லட்சம் கோடிக்கும் மேல் காட்டப்பட்டிருப்பதால் ராஜா மீதான நெருக்குதல் அதிகரித்திருப்பதாக கருதப்படுகிறது.



அடுத்த சுப்ரீம் கோர்ட் அமர்வுக்கு முன்பாக ராஜா மீது நடவடிக்கை எதையாவது எடுத்தாக வேண்டிய கட்டத்திற்கு தற்போது மத்திய அரசு தள்ளப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.



இந்தியா வாங்குற கடன் எல்லாமே, இவங்க கொள்ளையடிக்கதான்..


இவங்க மாதிரி ஆளுங்க இருக்குற வரைக்கும், இந்திய முன்னேறது ரொம்ப கஷ்டம்

Thursday, October 14, 2010

பிரமிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்



திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச் சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன


அவைகளில் சில.........





1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.






2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் பெடிப்பதில்லை. ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும்வெடிப்புஏற்படுவதில்லை.






3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும்.. உலோகச்சிலையானாலும் உலோ கத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாகஇருக்கின்றன.






4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக்கொதிக்கின்றன.






திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாகஇருக்கின்றன.






1. திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிககூம் பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம்,புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதி ரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன.






2. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.






3. ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும்.வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.






4. உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.






5. பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது.






6. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.






7. அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.






8. ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலைசுமார்80ரூபாய்.






9. சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.






10. ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி, இவருயை நகைகளை வைத்துக்கொள்ள இடம் இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாட்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.






11. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100கோடி.






12. மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ண தேவராயர், அச்சதராயர் போன்றோர் .ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கை சமர்பித்து இருக்கிறார்.






13. ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி.966 ஜுன் 8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன் பெருந்தேவி நகைகளைத்தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார். முதலாம் குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து காணிக்கைசெலுத்திஉள்ளார்.






14. திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.






15. வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மார்கழிமாத அர்சனைக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.






16. சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப்பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்படடை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெருகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம் தெரிந்தவர், நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமயைான் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார்.






17. அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.






18. ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம்.






19. எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.






20. 1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச்சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். அவர் குணமடைய ஏழுமலையானை பிராத்தித்திருகிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக்கடன்செலுத்தியிருக்கிறார்.






21. ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்.






22. திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலைப்பட்டார்கள்.






23. திருப்பதி அலமேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச்சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். உள் பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள். வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு பரிமள அறையில் வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திக்கு சேர்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள் பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ,50000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன.






24. ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்னுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது.






25. ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.






25. வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும்.வடகலை சம்பிரதாயத்தில் '' வேங்கடமெனப்பெற்ற" என்ற பாசுரமும், தனியன்களும் இடம் பெறும். சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென் கலை சாத்து முறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம் செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.






26. கி.பி.1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதிதாயாருக்கு திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி.1764ல் நிஜாம் தெளலா என்பவனின் தலைமையில் வந்த முஸ்லீம் படைகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.






27. திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருபதி கொண்டு வரப்பட்டு ஏழுமலை ஆண்டவனுக்கு சாத்தப்படுகிறது. ஸ்ரீ ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கிணார்.






28. திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை. நந்திவர்மன் (பல்லவர்) ஆண்ட கி.பி.830 தொடங்கி 1909 வரை உள்ளன. கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுக்கள் தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுக்கள் தமிழில் தான் உள்ளன.






நன்றி: ஸ்ரீ ஆஞ்சநேயர் விஜயம்(செப்டம்பர் 2009). டாக்டர்.இந்தர்சந்த்சுரானா

Thursday, April 29, 2010

தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில்


தமிழ்நாட்டிலுள்ள தஞ்சை பெரிய (பெருவுடையார்) கோவில் உலக பிரசித்தி பெற்ற ஆச்சரியமான கட்டிட வேலைப்பாடு கொண்ட இந்து ஆலயம். இது சோழ  பேரரசன் இராஜராஜ சோழன் தஞ்சாவூரை ஆட்சிசெய்த 10ம்-11ம் நூற்றாண்டில்(கி.பி) கட்டப்பட்டதாக கல்வெட்டுக்கள் மூலமாக அறியப்படுகின்றது.

இக் கோயிலின் பலவிடங்களிலும் கல்வெட்டுக்கள் (வெளிச்சுவர், பிரகாரச்சுவர்) சிற்பங்கள தென்படுவதாகவும், இவை அனைத்தும் இராஜராஜ சோழன் காலத்தவை எனவும் இவற்றில் 107 பந்திகளில் கல்வெட்டு வசனங்கள் , 108 சிவதாண்டவ வடிவங்கள் இத்துடன் சமய நாயன்மார்கள் வாழ்க்கை வரலாறு என பல விசயங்கள் காணப்படுகின்றன.
மேலும் , இந்த கோவிலின் வெளிச்சுவருக்கு வெளியே கோட்டை போன்ற அமைப்பும் , அகழி போன்ற வாய்க்காலும் காணப்படுவதாகவும் சொல்லப்படுகின்றது. அத்துடன் இந்த ஆலயத்தின் பெருவுடையார் (மிகப்பெரிய சிவலிங்கம்) , நந்தி , பெருவுடையார் சன்னிதியின் மேல் கலசம் , கலசம் இருக்கும் பெரிய விமானம் ஒவ்வொன்றும் தனியான ஒரு கல்லில் செதுக்கப்பட்டுள்ள விடையம் இந்த ஆலயத்தின் அழியாத புகழுக்கு காரணமாவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.


இந்த ஆலயத்தில் குறிப்பிடும் படியான தகவல்கள்.


•இந்த ஆலய கட்டிட வேலைகள் 1003 ம் ஆண்டு தொடங்கி 7 வருடங்களில் முடிவுற்றதாக குறிபிடப்படுகின்றது.

•முதன்மையான கோபுரத்தின் உயரம் 215 அடி (65 மீற்றர்) என கணக்கிடப் பட்டுள்ளது. இது கருவரையின் மேலே 96 அடி சதுரமான அடித்தளத்தின் மேல் ஒரே கல்லால் உருவாக்கப்பட்டது. கருவறையினமீதகட்டிய இந்த மிகப்பெரிய விமானமே இக்கோயிலின பெரும சிறப்பாகபோற்றப்படுகிறது.

•கோபுரத்தின் நிழல் எக்காலத்திலும் நிலத்தில் படாத வண்ணம் கோபுரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கர்ப்பகிரகத்தில் மட்டும் சூரிய வெளிச்சம் படும் அற்புதமான கட்டிட கலையால் உருவாக்கப்பட்டது.

•இந்த ஆலயத்தின் கருவறையில் அமைந்துள்ள ஆவுடையார் எனும் மூல லிங்கம் விசேட ரகத்தில் அமைந்த தனியான கல்லில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் 23 அடி , சுற்றளவு 54 அடி உடையதாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

•கோவிலின் முன் அமர்ந்த கோலத்தில் உள்ள தனி கல்லில் செதுக்கிய நந்தி 25 டன்  எடை , 12 அடி உயரம் , 8 அடி அகலம், 20 அடி நீளமும் உடையது.

•கோபுரத்தின் உச்சியில் (விமானத்தில்) உள்ள எண்கோண கலசம் 3.8 மீற்றர் உயரமும் 81 டன் எடை ( 15 யானைகள் எடை) உடைய தனியான 25 அடி சதுர கல்லில் செதுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. ஒவ்வொரு மூலைக்கு இரண்டு நந்திகளாக எட்டு நந்திகள் இந்த விமானத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

•மேல் சொல்லப்பட்ட கலசத்தினை செய்வதற்கு வேண்டிய அந்த கல்லை அக்காலத்தில் 6 கிலோமீற்றர் தூரத்தில் இருந்து கொண்டு வந்த மகா திறமை இன்றும் புரியாத புதிராக உலகில் பலராலும் பேசப்படுகின்றது.

•தஞ்சை பெரிய கோவில் கட்டுவதற்கு இந்தியாவின் பல பகுதியிலும் இருந்து கொண்டு வரப்பட்ட கற்களின் மொத்த அளவானது ஜீசா பிரமிட்டு கட்டுவதற்கு பயன் படுத்தியதை விடவும் அதிகம் என ஆராச்சி செய்வோர் கணக்கிட்டுள்ளனர்.

•இந்த ஆலயத்தின் சுற்று சுவர்கள் அடங்கலான பகுதிக்குள் 200 தாஜ் மஹால்களை அடைக்கும் அளவுக்கு மிகவும் பிரமாண்டமாக விரிந்து பரந்துள்ளதாக வியந்த பேசப்படுகின்றது.

•தமிழர்களின் கலை, கலாச்சாரம், கற்பனைத் திறன், சிற்பத் திறன் ஆகியவற்றிற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ள தஞ்சை பெரிய கோயிலானது தமிழர்களின் ஆட்சி , அறம் இவற்றுடன் ஆன்மீகப் பணிக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது.

•இராஜ ராஜ பேரரசர் கோவில் திருப்பணியுடன் மட்டும் நின்றுவிடவில்லை. இவரது ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாகவும் சுபீட்சமாகவும் வாழ்ந்தனர் எனவும் சொல்லப்படுகின்றது. மக்களுக்காக உயர் கல்விக்கூடங்கள், அருட்சாலைகள், அறச்சாலைகள் போன்ற பொது நற்பணி மன்றங்களையும் மன்னர் நிறுவியிருந்ததாக வரலாறு குறிப்பிடுகின்றது.

•இந்த ஆலயத்தின்வெளியே சோள பேரரசன் இராஜராஜனின சிலை அமைக்கப்பட்டுள்ளது.

•இந்தக் கோவில் தற்போது மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறை வசம் இருந்துவருகின்றது.

•இந்த ஆலயம் (பிரகதீஸ்வரர்) UNESCO இனால் உலக கலாச்சார சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Lost Temples of India : BBC

Tuesday, February 16, 2010

Senthil - The real hero!

Senthil was a mechanical engineer who worked in Mumbai initially and then moved to IBM, Bangalore, Karnataka. He was very determined and dedicated to do something for poor and village people. In 1999, he decided to go USA for 5 years to make more money and come back to do something for village people. Amazing, isn’t it?


Come and visit Thennur village near Trichy, Tamil Nadu. I got a chance to go there when we went to our friend Thilaga’s marriage. Here is a man who was earning Rs 2 lakhs per month 5years ago in the US . One of his ambitions, from the time he was studying in school, is to serve his village. Hence, after earning some money for his parents, he resigned his job in the US and came to his village to start an NGO in order to support the village. He is just 36 years old now which means he resigned his job when he was 31! He is also called as ‘Ilam Gandhi’ (Young Gandhi).

So, what did he do after resigning his job?? He invested Rs 40 lakhs in Thennur to build a community health center and an informal learning center. Out of the Rs 40 lakhs which he spent, Rs 31 lakhs came out of his own pocket. He started an NGO called ‘Payir’ to help this village

Have a look at his PAYIR’s building’s below:


The community health center:





Informal learning center




Now, he has appointed 5 people who are locals and who function as his staff. They teach proper English to the schools available in their locality.

Local staffs working in Payir


And that is not all! He has created a small IT company within that village. This company has 4 employees as of now, who are all graduates from this village. They have a US client and are currently working on a $2500 project. This IT company is in the middle of a Coconut farm.


Have a look at their IT company below:

The IT company in the middle of a farm



While working in the US , he used to deposit a little money for his parents as one of his mother’s wishes was to build a house for themselves. With his savings, his parents now live in a big house at Srirangam.


But, that’s not the case with him. He lives in a small hut in that village itself.

Have a look at his room below:
 

I asked him, how he is able to live without any earnings? His reply was as follows:


“Payir trust provides me with daily food. My trustees have agreed on this. I have built a hut for myself using my past earnings. So shelter is not a problem. I have 3sets of shirts and Vesti(Dhoti) which I can use for the next 2 years. My friends will get me a few dresses once or twice in a year. What more do I need in my life??”.

Have a look at the slipper of the great man who was earning 2Lakhs a month in US:
 

When I asked, how he will manage in his old age, if he gets any disease, he coolly replied that he will go to a Govt. hospital where everything is free of cost.


How many of us will dare to act like Senthil ? Many of us have so many dreams in life like becoming a music director, to become a cricketer, to do MBA, go to the Himalayas, help the schools where we studied, to become a district collector etc etc.. But we all lose our dreams just to earn money and want to reach a position which we call it as ‘Status’. We determine our path by seeing what others are doing. We select our needs based on what others have. We select a course to study based on the job availability and its salary rather than our interest for the subject.

Every one forgets that we have only one life to achieve our dream. Many of us chase what we do not want actually. If you still have some of your dreams unfulfilled, remember that you are the reason behind it. Start now and chase your dreams!

Senthil had a dream and he started executing it now! Believe me or not. Senthil started dreaming about Payir organization during his 11th std!

Senthil - The real hero!
 

Coming to the social aspect of Senthil, how many of us will leave all that we have earned and work for the benefit of others? Have we ever dreamt of doing what Senthil has done?



While returning from Thennur, only one thing was running on my mind. If everyone of us did atleast 0.1% of what Senthil has done, our India will be much better than any other country in this world!!


If many of us continue to focus on personal growth without worrying about our nation, in future, there will be many more Senthil’s around us who would have sacrificed their personal life for the welfare of this country.


Thennur is not just another village in our India map. It is a start of a new beginning for India . Thennur is a proof of the change that youth can bring in our country.

Tuesday, January 26, 2010

Hinduism

Four years ago, I was flying from JFK NY Airport to SFO to attend a meeting at Monterey , CA An American girl was sitting on the right side, near window seat. It indeed was a long journey - it would take nearly seven hours.


I was surprised to see the young girl reading a Bible unusual of young Americans. After some time she smiled and we had few acquaintances talk. I told her that I am from India

Then suddenly the girl asked: 'What's your faith?' 'What?' I didn't understand the question.

'I mean, what's your religion? Are you a Christian? Or a Muslim?'

'No!' I replied, 'I am neither Christian nor Muslim'.

Apparently she appeared shocked to listen to that. 'Then who are you?' 'I am a Hindu', I said.

She looked at me as if she was seeing a caged animal. She could not understand what I was talking about.

A common man in Europe or US knows about Christianity and Islam, as they are the leading religions of the world today. But a Hindu, what?

I explained to her - I am born to a Hindu father and Hindu mother. Therefore, I am a Hindu by birth.

'Who is your prophet?' she asked.

'We don't have a prophet,' I replied.

'What's your Holy Book?'

'We don't have a single Holy Book, but we have hundreds and thousands of philosophical and sacred scriptures,' I replied.

'Oh, come on at least tell me who is your God?'

'What do you mean by that?'

'Like we have Jesus and Muslims have Allah - don't you have a God?'

I thought for a moment. Muslims and Christians believe one God (Male God) who created the world and takes an interest in the humans who inhabit it. Her mind is conditioned with that kind of belief.

According to her (or anybody who doesn't know about Hinduism), a religion needs to have one Prophet, one Holy book and one God. The mind is so conditioned and rigidly narrowed down to such a notion that anything else is not acceptable. I understood her perception and concept about faith. You can't compare Hinduism with any of the present leading religions where you have to believe in one concept of god.

I tried to explain to her: 'You can believe in one god and he can be a Hindu. You may believe in multiple deities and still you can be a Hindu. What's more - you may not believe in god at all, still you can be a Hindu. An atheist can also be a Hindu.'

This sounded very crazy to her. She couldn't imagine a religion so unorganized, still surviving for thousands of years, even after onslaught from foreign forces.

'I don't understand but it seems very interesting. Are you religious?'

What can I tell to this American girl?

I said: 'I do not go to temple regularly.. I do not make any regular rituals. I have learned some of the rituals in my younger days. I still enjoy doing it sometimes... .'

'Enjoy? Are you not afraid of God?'

'God is a friend. No- I am not afraid of God. Nobody has made any compulsions on me to perform these rituals regularly.'

She thought for a while and then asked: 'Have you ever thought of converting to any other religion?'

'Why should I? Even if I challenge some of the rituals and faith in Hinduism, nobody can convert me from Hinduism. Because, being a Hindu allows me to think independently and objectively, without conditioning. I remain as a Hindu never by force, but choice.' I told her that Hinduism is not a religion, but a set of beliefs and practices. It is not a religion like Christianity or Islam because it is not founded by any one person or does not have an organized controlling body like the Church or the Order, I added. There is no institution or authority..

'So, you don't believe in God?' she wanted everything in black and white.


'I didn't say that. I do not discard the divine reality. Our scripture, or Sruthis or Smrithis - Vedas and Upanishads or the Gita - say God might be there or he might not be there. But we pray to that supreme abstract authority (Para Brahma) that is the creator of this universe.'


'Why can't you believe in one personal God?'


'We have a concept - abstract - not a personal god. The concept or notion of a personal God, hiding behind the clouds of secrecy, telling us irrational stories through few men whom he sends as messengers, demanding us to worship him or punish us, does not make sense. I don't think that God is as silly as an autocratic emperor who wants others to respect him or fear him.' I told her that such notions are just fancies of less educated human imagination and fallacies, adding that generally ethnic religious practitioners in Hinduism believe in personal gods. The entry level Hinduism has over-whelming superstitions too. The philosophical side of Hinduism negates all superstitions.


'Good that you agree God might exist. You told that you pray. What is your prayer then?'

'Loka Samastha Sukino Bhavantu. Om Shanti, Shanti, Shanti,'


'Funny,' she laughed, 'What does it mean?'


'May all the beings in all the worlds be happy. Om Peace, Peace, Peace.'


'Hmm ...very interesting. I want to learn more about this religion. It is so democratic, broad-minded and free' she exclaimed.


'The fact is Hinduism is a religion of the individual, for the individual and by the individual with its roots in the Vedas and the Bhagavad-Gita. It is all about an individual approaching a personal God in an individual way according to his temperament and inner evolution - it is as simple as that.'


'How does anybody convert to Hinduism?'


'Nobody can convert you to Hinduism, because it is not a religion, but a set of beliefs and practices. Everything is acceptable in Hinduism because there is no single authority or organization either to accept it or to reject it or to oppose it on behalf of Hinduism.'


I told her - if you look for meaning in life, don't look for it in religions; don't go from one cult to another or from one guru to the next.


For a real seeker, I told her, the Bible itself gives guidelines when it says ' Kingdom of God is within you.' I reminded her of Christ's teaching about the love that we have for each other. That is where you can find the meaning of life.


Loving each and every creation of the God is absolute and real. 'Isavasyam idam sarvam' Isam (the God) is present (inhabits) here everywhere - nothing exists separate from the God, because God is present everywhere. Respect every living being and non-living things as God. That's what Hinduism teaches you.


Hinduism is referred to as Sanathana Dharma, the eternal faith. It is based on the practice of Dharma, the code of life. The most important aspect of Hinduism is being truthful to oneself. Hinduism has no monopoly on ideas. - It is open to all. Hindus believe in one God (not a personal one) expressed in different forms. For them, God is timeless and formless entity.

Ancestors of today's Hindus believe in eternal truths and cosmic laws and these truths are opened to anyone who seeks them. But there is a section of Hindus who are either superstitious or turned fanatic to make this an organized religion like others. The British coin the word 'Hindu' and considered it as a religion.


I said: 'Religions have become an MLM (multi-level- marketing) industry that has been trying to expand the market share by conversion. The biggest business in today's world is Spirituality. Hinduism is no exception'


I am a Hindu primarily because it professes Non-violence - 'Ahimsa Paramo Dharma' - Non violence is the highest duty. I am a Hindu because it doesn't conditions my mind with any faith system..

A man/ woman who change 's his/her birth religion to another religion is a fake and does not value his/her morals, culture and values in life. Hinduism was the first religion originated. Be proud of your religion and be proud of who you are.